கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் "தமிழ் நாட்டை காப்பாற்றியவன்" என்றும் "ஒரு தாய் தன்னுடைய குழந்தையை பேணுவதைப் போல செந்தமிழை வாழவைக்க பிறந்தவன்" என்றும் சோழர்கள் காலக் கல்வெட்டில் குறிப்பிட்டவன் "காடவன் கோப்பெருஞ்சிங்கப் பல்லவன்" ஆவான் :-
"தமிழ் நாடு காத்த பெருமான்"
"பேணு செந்தமிழ் வாழப்பிறந்த காடவன்"
இவரைப்போல வேறு எந்த அரசர்களும் இவ்வளவு பெருமையாக தமிழைப் பற்றி கல்வெட்டில் குறிப்பிட்டது கிடையாது. பாண்டியர்களும் தங்களது செப்புப்பட்டயங்களில் தமிழைப் பற்றி பெருமையாக குறிப்பிட்டிருக்கிறார்கள்.
"சகல புவனச் சக்கரவர்த்திகளான காடவன் கோப்பெருஞ்சிங்க பல்லவனுக்கு", தமிழர்களின் கட்சி" என்று சொல்லப்படும் "நாம் தமிழர் கட்சியினர்" விழா கொண்டாடுவார்களா ?
ஒருபோதும் கொண்டாடமாட்டார்கள். ஏனென்றால் காடவன் கோப்பெருஞ்சிங்க பல்லவன், வன்னிய குல க்ஷத்ரிய சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் விழா கொண்டாடமாட்டார்கள்.
பலருக்கு விழா எடுக்கும் "நாம் தமிழர் கட்சியினர்" வன்னிய அரசர்களுக்கு விழா எடுக்கமாட்டார்கள் என்பதே உண்மையாகும்.
இதை நாம் தமிழர் கட்சியில் உள்ள வன்னியர்களும் நன்றாக அறிவார்கள். இதுதான் "தமிழர்" என்று குறிப்பிட்டுக்கொள்ளும் பல கட்சிகளின் நிலையாகும்.
வாழ்க தமிழ்.
----- xx ----- xx ----- xx -----
No comments:
Post a Comment