Tuesday 29 December 2020

சோழர் படை வீரர்களாக இருந்த பள்ளி வன்னிய ஜாதியினர்

 தொண்டை மண்டலப் பகுதிகளை ஆட்சி செய்துவந்த சம்புவராயர்கள் பள்ளி(வன்னியர்) குலத்தவர்.

நடு நாட்டின் வலிமை மிகுந்த சிற்றரசர்களான காடவராயர்களும் வன்னியர் இனத்தவரே.இவர்கள் கல்வெட்டுக்களில் தம்மை பள்ளி இனத்தவராகவே குறிப்பிட்டுள்ளனர்(ARE 137 of 1900; S.I.I vol.7, No.150).

 கி.பி 12 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட சிலை எழுபது நாயக்கர் காலத்திற்கு முன் சோழ, பாண்டிய மன்னர்களின் காலத்தில்தான் எழுதப்பெற்றது.வன்னிய குலத்தவரின் பெருமைகளைக் குறிப்பிடும் இந் நூல் வன்னியர்களை ஆட்சி செய்யும் மன்னர் இனத்தவராகக் குறிப்பிடுகின்றது.

பல்வேறு கல்வெட்டுக்கள் மூலம் வன்னிய குலத்தவர் சோழர் காலத்தில் பெற்றிருந்த செல்வாக்கும் அதிகாரமும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.வன்னிய குலத்தவருக்கு அரசரால் கொடையளிக்கப்பட்ட நிலங்கள் "பள்ளிப் பேறு" எனப்பட்டன.(ARE 200 of 1904)

மேலும் வன்னியர் குலத்தவர் விற்போர் வீரர்களாக விளங்கினர். இவர்கள் "வில்லிகள்" என்றும் அழைக்கப்பட்டனர்(ARE 360 of 1902)(ARE 394 of 1921).பள்ளி குல மக்கள் வாழ்ந்த பகுதி பள்ளி நாடு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது(ARE 35 of 1913).

விஜயநகர வேந்தர் படையெடுப்பின்போது அவர்களை எதிர்த்து முதலில் போரிட்டது தமிழ் குறு நில மன்னர்களான சம்புவராயர்கள்தான்.இவர்கள் வன்னியர் குலத்தவர்.(ARE 267 of 1919)

 சோழர்களின் தலைநகரமான கங்கைகொண்ட
===========================================
சோழபுரத்து குறுநில மன்னர்களும் படை வீரர்களும்
================================================
முனைவர் இல. தியாகராஜன் அவர்கள் "அரியலூர்" பற்றி ஆங்கிலத்தில் எழுதிய சில குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் எடுத்து நான் தமிழாக்கம் செய்திருக்கிறேன். இது நான் எழுதியது அல்ல.
----- xx ----- xx ----- xx -----
முதலாம் இராஜ ராஜ சோழனின் மகனான முதலாம் இராஜேந்திர சோழனின் ஆட்சி காலத்தில் வரலாற்றில் ஒரு புதிய அத்யாயம் தமிழகத்தோடு மட்டுமல்லாமல் இன்றைய அரியலூர் மாவட்டத்திலும் பிரதிபலித்தது. அதற்கு மிக முக்கிய காரணம் அவனால் அம்மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் தாலுக்காவில் புதியதாக நிர்மாணிக்கப்பட்ட சோழர்களின் தலைநகரமான கங்கைகொண்ட சோழபுரமே ஆகும்.
படையாட்சிகள் என்று புகழோடு அழைக்கப்படும் வன்னியர்களே அரியலூர் மாவட்டத்தின் பெரும்பான்மை மக்களாவார்கள். இவர்கள் சோழர்கள் காலத்தில் பள்ளிகள் என்றும் அழைக்கப்பட்டனர். அரியலூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலிருந்து கிடைக்கும் சுமார் ஐம்பது சோழர்கள் காலத்து கல்வெட்டுகள் வன்னியர்களைப் பற்றி குறிப்பிடுகின்றன.
அரியலூர் மாவட்டத்தில் இருந்த "காரைக்காடு", "துண்டநாடு", "சென்னிவளக் கூற்றம்" போன்ற பகுதிகளில் இருந்த ஊர்களில் பல பள்ளிகள் இருந்திருக்கிறார்கள் என்பதை சோழர்கள் காலத்து கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
வீர நாராயண சதுர்வேதிமங்கலத்தில் இருந்த 11 சேரிகளில் பள்ளிகளின் (வன்னியர்கள்) வாழ்விடங்கள் இருந்ததை முதலாம் இராஜேந்திர சோழனின் கி.பி. 1022 ஆம் ஆண்டு கல்வெட்டு குறிப்பிடுகிறது.
சோழர்கள் காலத்து பல கல்வெட்டுகளில் பள்ளிகள் பெற்றிருந்த பட்டங்களை பற்றி குறிப்பிடுகின்றன. அவை :-
"அரையன்",
"பெரியரையன்" (பேரரையன்),
"நாடு உடையான்",
"நாடாழ்வான்",
"காணி உடையான்",
"ஊர் உடையான்"
போன்றவைகளாகும். இப்பட்டப் பெயர்கள் சோழ அரசர்களின் பெயர் அல்லது பட்டங்களுடன் முன்னிட்டு சேர்த்து வழங்கப்பெற்றிருப்பது என்பது பள்ளிகள் (வன்னியர்கள்) எத்தகைய நிலையில் சோழர் அரசாங்கத்தில் இருந்திருக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டுகிறது. இப்பகுதி கல்வெட்டுகளில் இடம்பெற்றிருந்த பள்ளிகளின் சில பட்டங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது :-
"சோழேந்திர சிங்க பெரியரையன்",
"சிங்களாந்தக பெரியரையன்",
"மதுராந்தக பெரியரையன்",
"சுந்தர பெரியரையன்",
"முடிகொண்ட சோழ முத்தரையன்"
"கடாரம் கொண்ட சோழ பெரியரையன்"
"மாணிக்க பெரியரையன்",
"ஜெயம்கொண்ட சோழ துண்ட நாடாழ்வான்",
"துண்டநாடு உடையான் கல்யாணபுரம் கொண்டான்",
"தேனுரில் காணி உடையான் துண்டராயன்"
"ஆய்க்குடியில் காணி உடைய பள்ளிகளில் பொன்னநான முடிகொண்ட சோழ முத்தரையன் உள்ளிட்டாரும்"
"ஓலைப்பாடியில் காணி உடைய பள்ளிகளில் காரி கிரிச்சன் விக்கிரம சோழ முத்தரையன் உள்ளிட்டாரும்"
"தொங்கபுரத்தில் காணி உடைய பள்ளிகளில் அழகந் அம்பலவன் குலோத்துங்க சோழ முத்தரையன் உள்ளிட்டாரும்"
"மகதை மண்டலத்து தொழுவூர் பற்றில் குறுக்கையில் காணி உடைய பள்ளிகளில் பாண்டியன் சொக்கன் மரகத சோழ முத்தரையன் உள்ளிட்டாரும்"
மேற்குறிப்பிட்ட பட்டங்கள், வன்னியர்கள் சோழ அரசர்களுக்கு கொடுத்த ராணுவ வீரதீர பங்களிப்பையும் மற்றும் வன்னியர்களின் நிலவுடமை நிலையையும் மற்றும் சோழ அரசாங்கத்தில் வன்னியர்கள் பெற்றிருந்த அதிகார நிலையையும் காட்டுகிறது.
சோழர்களின் பல கல்வெட்டுகளில் பள்ளிகள் வில் வீரர்களாக இருந்துள்ளனர் என்றும் அவர்கள் வில்லாற்றலில் மிகுந்த நிபுணத்துவம் பெற்றிருந்தார்கள் என்றும் குறிப்பிடுகிறது. மேலும் சோழர் கல்வெட்டுகள் பல "விற் படை" வில்லாளிகள் பற்றி குறிப்பிடுகின்றன (வில்லிகள் படை). அவ் விற்படைகளில் வன்னிய ஜாதியை சேர்ந்தவர்களையே சோழர்கள் நிலைப்படுத்தினர்.
கி.பி. 1045 மற்றும் 1050 ஆம் ஆண்டினைச் சேர்ந்த விருத்தாச்சலம் கல்வெட்டுகள், ஜெயங்கொண்ட சோழபுரம் நகரம் (ஜெயங்கொண்டாம், உடையார் பாளையம் வட்டம்) உருவானதைப் பற்றியும், பள்ளி ஜாதியைச் சேர்ந்த சிலர் ஜெயங்கொண்ட சோழபுரம் மற்றும் விசயபுரத்தின் ராணுவ அதிகாரிகளாய் இருந்ததையும் குறிப்பிடுகின்றன.
பள்ளி ஜாதியைச் சேர்ந்த ஒரு குறுநில வேந்தன் "கூத்தன் பக்கனான ஜெயங்கொண்ட சோழ துண்ட நாடாழ்வான்", கி.பி. 1067 ஆம் ஆண்டின் கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறார். அவரது பெயர் "துண்ட நாட்டுப்" பகுதியின் அரசியல் அதிகாரத்தை வெளிப்படுத்துகிறது.
விக்கிரம சோழன் (கி.பி. 1118 - 1136) மற்றும் அதன்பிறகு வந்த சோழ மன்னர்கள் காலக் கல்வெட்டுகளில் "பள்ளி" மற்றும் "சுருதிமான்" ஜாதியைச் சேர்ந்தவர்களே சோழ அரசாங்கத்திற்கு படைவீரர்களையும், அதிகாரிகளையும், குறுநில மன்னர்களையும் வழங்கி சமகாலச் சமூதாயத்தில் மேன்மையான நிலையை அடைந்தார்கள்.
பள்ளி ஜாதியைச் சேர்ந்த அதிகாரி "சேந்தன் சுத்த மல்லனான வாணகோவரையன்" என்பவர் இரண்டாம் குலோத்துங்கச் சோழனிடம் "திருமுகக் காணி" என்னும் நிலங்களைப் பெற்றிருக்கிறார். அவர் சென்னிவனம் கோயிலுக்கு கி.பி. 1137 ஆம் ஆண்டில் நிலதானம் கொடுத்திருக்கிறார்.
சோழ மன்னன் இரண்டாம் இராஜாதிராஜ சோழனின் ஆட்சி காலத்தில் (கி.பி. 1166 - 1182) வன்னாடு உடைய இராஜராஜ தேவனான இராஜாதிராஜ மகதை நாடாழ்வான், துண்ட நாடு உடையான் திருவிராடனான துண்டராய வர்மன் அரியவாயன், கடந்தை சேந்தன் ஆதித்தனான இராஜராஜ வங்கார முத்தரையன், ஸ்ரீராமன் சுத்தமல்லனான விக்கிரம சோழ மலையகுலராயன் போன்ற குறுநில மன்னர்கள் "இராசகுலவர்" (அரச குலத்தவர், Royal Families) ஆவார்கள். இந்த இராசகுலத்தவர்கள் கோயில்கள் மற்றும் இன்னபிற நில உரிமைகளை ஆக்கிரமித்து தனதாக்கிக்கொண்டனர்.
கி.பி. 1216 ஆம் ஆண்டு கல்வெட்டு "சுருதிமான் இராஜேந்திர சோழ தெரிந்த வில்லிகள்" (வில்லாளிகள்) என்ற இராணுவ படைப் பிரிவைப் பற்றி குறிப்பிடுகிறது. இப் படைப் பிரிவில் சுருதிமான் ஜாதியைச் சேர்ந்த "படை முதலிகள்" (இராணுவ தலைவர்கள்) இடம்பெற்றுள்ளனர். குன்றக்குறம், மேல்கரைக்காடு உள்ளிட்ட சுருதிமான் அஞ்சுநாடு படைப்பிரிவுகள் இதில் இடம்பெற்றுள்ளன.
வன்னிய ஜாதியைச் சேர்ந்த பல பட்டங்களுடைய குறுநில மன்னர்களான "கடந்தையார்கள் (என்கிற) வங்கார முத்தரையன்", "துண்ட நாடு உடையார் / துண்டராயன் ", "வாணகோவரையர்" மற்றும் "கச்சியராயர்கள்" ஆட்சி அதிகாரம் பெற்ற பாடிக்காவல் அதிகாரிகளாய் அரியலூர் மற்றும் அதன் பிற பகுதிகளிலும் இருந்துள்ளனர்.
போர்குடிகளைச் சேர்ந்த "பள்ளி" மற்றும் "சுருதிமான்" ஜாதியைச் சேர்ந்தவர்கள் சோழ இராணுவத்தில் சேர்ந்து உயர்ந்து பல உயரிய பதவிகளைப் சோழ அரசாங்கத்தில் பெற்று அரியலூர் பகுதியில் குறுநில மன்னர்களாக கோலோச்சியவர்களில் :-
"துண்ட நாடு உடையார்"
"கடந்தையார் (என்கிற) வங்கார முத்தரையன்"
"வாணகோவரையர்"
போன்றோர்கள் மிக மிக முக்கியமானவர்கள் ஆவார்கள்.
----- xx ----- xx ----- xx -----
நன்றி : முனைவர் இல. தியாகராஜன் அவர்கள்.





===================================================
Chieftains Warriors of Gangaikonda Cholapuram in Ariyalur Region
===================================================
The reign of Rajendra Chola-I, son of Rajaraja Chola-I, opened a glorious chapter not only in the history of Tamil Nadu but also of Ariyalur Region because of his foundation for a new capital called Gangaikondacholapuram in Udaiyarpalayam Taluk.
Vanniyar, popularly called Padaiyatchis are one of the major communities living in Ariyalur region. During the medieval period they were called as Palli. Some fifty records of the Chola period are available in Ariyalur region and in the adjoining area which refer to the Vanniyas. The inscriptions show that many Pallis hailed from the villages located in Karaikkadu, Tunda Nadu and Sennivala Kurran which existed in Ariyalur region. A record of Rajendra Chola-I in 1022 A.D. refers to Palli (Vanniyar) settlement in the 11 cheris of Viranarayana Chaturvedimangalam.
Many inscriptions show that the Pallis had the titles of Araiyan, Periyarayan, Nadu Udaiyan, Nadalvan, Kani Udaiyan, Ur Udaiyan etc., which were prefixed with the name or surname of Chola Kings indicating their position in Chola Government. The following were a few titles of individual Pallis of this area as shown in inscriptions.
Cholendrasinga Periyaraiyan.
Singalandaka Periyaraiyan.
Madurandaka Periyaraiyan.
Sundara Periyaraiyan.
Mudikondachola Muttaraiyan.
Kadarankondachola Periyaraiyan.
Manikka Periyaraiyan.
Jayankondachola Tunda Nadalvan.
Tundanadu Udaiyan Kalayanapuramkondan.
Tenuril Kani udaiaya Tundarayan.
Aykkudiyil Kani udaiya Palligalil Ponnan (alias) Mudikonachola Muttaraiyan.
Olaippadiyil Kani udaiya Palligalil Karitirichchan Vikramachola Muttaraiyan.
Tongapurattil Kani udaiya Palligalil Alagan Ambalavan Kulothungachola Muttaraiyan.
Kurukkaiyil Kani udaiya Palligalil Pandyan Sokkan Maragadachola Muttaraiyan.
The above titles show their participation in the military exploits of Chola Kings and their landholding status and official position in Chola Government. Many Chola records refers to the Pallis as Bowmen and adept in archery (Vil, Villigal). Records name several regiments of archers (villigal padai) composed of the people of Vanniya caste by the Cholas.
Two records of 1045 A.D. and 1050 A.D. in Vriddachalam indicate the emergence of Jayankondacholapuram nagaram (Jayankondam, Udaiyarpalaiyam Taluk) and some individuals of palli caste of Jayankondacholapuram and Visayapuram as army personnel.
A chief of palli caste named Kuttan Pakkan (alias) Jayankondachola Tunda Nadalvan figures in the record of 1067 A.D. His name indicates his political status in Tunda Nadu area.
During the reign of Vikramachola (1118-36) and of his successors, inscriptions give enough information to show that the Palli and Surutiman castes of this region supplied soldiers, officials and generals to the Chola Government and enjoyed status in the contemporary society.
An officer of Palli caste named Sendan Suttamallan (alias) Vanakovaraiyan received land called tirumugakani from the king and he also made a gift of land to the Sennivanam temple in 1137 A.D.
In the reign of Rajadhiraja Chola-II (1166 - 1182 A.D), Vannadu Udaiyan Rajarajadevan (alias) Rajadhiraja Magadai Nadalvan, Tundanadu Udaiyan Tiruviradan (alias) Tundarayapanman Ariyavayan, Kadandai Sendan Adittan (alias) Rajaraja Vangara Muttaraiyan, Siraman Suttamallan (alias) Vikramachola Malayakularayan, etc. It seems these chiefs who had the status of "Rasukulavar" (Royal Families) had become aggressive by appropriating for themselves landholdings of temples, etc.
A record of 1216 A.D. refers to an army wing called Surutiman RajendraChola Terinda Villigal (archers) which comprised of Padaimudaligal (army generals) of Surutimans of anju nadu including Kunra Kurram and Melkaraikkadu.
The number of Chieftains of Vanniya caste with the titles of Vangara Muttaraiyan also called Kadandaiyar, Tunda Nadu Udaiyar/Tundarayan, Vanakovaraiyar and Kachchiyarayar held sway as Padikaval officers over parts of Ariyalur region.
The people of martial communities such as Palli and Surutiman castes joined the Chola Militia and rose to high status in the Chola Government and dominated as chiefs in Ariyalur region. Of them Tundanadu Udaiyar, Kandandaiyar (also called Vangara Muttaraiyar) and Vanakovaraiyar were important chiefs.
Thanks to : Prof Dr. L. Thiyagarajan.



Friday 17 January 2020

வரலாற்றில் வன்னியர்கள் நாடும் வன்னியர்கள் ஆட்சி செய்த காலமும்

முரளி நாயக்கர் பதிவிலிருந்து



வன்னியர் நாடு (திகுலர் பூமி)
-----------------------------------------------

வேலூர் மாவட்டம், அகரத்தில் இருக்கும் விஜயநகர வேந்தர் மல்லிகார்ஜுன தேவ மஹாராயரின் கல்வெட்டு ஒன்று (கி.பி.1469) :-

"அகரம் பெருமாள் ஆனைகாத்த அப்பன் சிரிகாரியம் பாற்கும் வன்னிய திம்மய நாயக்கர்"

என்று குறிப்பிடுகிறது. இவரை "வன்னிய திம்மு நாயக்கர்" என்றும் கல்வெட்டு குறிப்பிடுகிறது. மேலும் இக் கல்வெட்டு "வன்னிய நாட்டு நாயகஞ் செய்வார்" என்று தெரிவிக்கிறது. இந்த "வன்னிய நாடு" என்பது வன்னியர்கள் அரசாட்சி செய்த நாடாகும்.

விஜயநகர காலத்திய கி.பி.1519 ஆம் ஆண்டு கல்வெட்டு ஒன்று, திருக்கோயிலூர் உள்ளிட்ட பகுதிகள் அடங்கிய "வன்னிய வட்டத்தில்", குதிரை காணிக்கை என்கிற வரியை வசூலித்து, அதை கோயில் நற்பணிக்காக தன்னுடைய மூத்த சகோதரி வயிச்சம்மன் பெயரினில் திம்மப்ப நாயக்கர் அவர்கள் கொடுத்தார்கள் என்றும் இவர் வாசல் மல்லப்ப நாயக்கரின் மகனாவார் என்றும் கல்வெட்டு தெரிவிக்கிறது.

ஆண்டு குறிப்பிடாத மற்றொரு கல்வெட்டு ஒன்று, திம்மப்ப நாயக்கர் அவர்கள், "வன்னியர் அரசாட்சி காலத்தில்" பெறப்படும் வரியை தன்னுடைய சகோதரி வயிச்சம்மன் அவர்களின் பெயரினில் ஒரு நற்கட்டளை ஏற்படுத்தினார்கள் என்பதை தெரிவிக்கிறது. எனவே, கல்வெட்டுகளில் இருந்து :-

"வன்னிய நாடு"

"வன்னிய வட்டம்"

"வன்னியர் அரசாட்சி காலம்"

என்று தெரியவருகின்றன. "திகுலர் பூமியை கைப்பற்றியவர்கள்" என்று விஜயநகர அரசர்களை கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. இதை அறிஞர் பெருமக்கள் "தமிழர் பூமியை கைப்பற்றியவர்கள்" என்று விளக்கம் கொடுத்துள்ளார்கள் என்பதாகும். ஆனால், இந்த விளக்கம் என்பது மிகப்பெரும் பிழையாகும். எந்த ஒரு சான்றும் தமிழர் பூமி/நாடு என்று சொல்லவே இல்லை என்பதாகும்.

கி.பி.1233 ஆம் ஆண்டின் ஓய்சாள கன்னட கல்வெட்டு ஒன்று, காடவராயரிடம் இருந்து மூன்றாம் ராஜராஜ சோழனை மீட்ட தளபதிகளான அப்பண்ணா மற்றும் கோப்பையா ஆகியோரைப் பற்றி குறிப்பிடுகிறது. இதில் மிக குறிப்பாக அப்பண்ணா அவர்கள் "திகுல மண்டலத்தை கொள்ளையிட்டவர்" என்று குறிப்பிடப்பட்டார்கள் என்பதாகும்.

இந்த கன்னட கல்வெட்டு குறிப்பிடும் "திகுல மண்டலம்" என்பது வன்னியர்களான காடவராயர்கள் அரசாட்சி செய்த பகுதியாகும். இந்த கருத்தை உறுதிப்படுத்தும் விதமாக, கி.பி.14 ஆம் நூற்றாண்டின் "மதுரா விஜயம்" ஒன்பதாம் காண்டம் சுலோகம் - 28, வன்னிய அரசர்களை பற்றி தெரிவிக்கிறது :-

சுலோகம் - 28 : "வீர கம்பண்ணரின் வில்லில் இருந்து புறப்பட்ட அம்புகள் ஸர்ப்பங்களைப்போல் சீறிக்கொண்டு பாய்ந்து வந்தன. அவ்வாறு அவை பாய்ந்து சென்றபோது கேரள மக்களின் மூச்சுக் காற்றையும், வன்னிய மன்னர்களின் நாட்டை நாசம் செய்த தீயைப் போலவும், ஆந்திர தேசத்தை தகிக்கும் சூரியன் போலவும் காணப்பட்டன"

மதுரா விஜயத்தின் மேற்குறிப்பிட்ட சுலோகம் - 28, மிகத் தெளிவாக "கேரள மக்களின் நாட்டையும்", "தமிழக மக்களின் நாட்டையும்", "ஆந்திரா மக்களின் நாட்டையும்" என்று குறிப்பிடுகிறது. இதில் "தமிழ்நாடு" என்று குறிப்பிடுவதற்கு பதிலாக "வன்னிய மன்னர்களின் நாடு" என்றே குறிப்பிடுகிறது.

கன்னட நாட்டில் இருந்த சோழர்களின் தலைக்காட்டுப் (தழைக்காடு) பகுதியை அரசாட்சி செய்த சோழ சாமந்தர்களான "தகடூர் அதியமான்", "திகுல தாமன்", "நரசிம்ம வர்மன்" ஆகியோரை ஓய்சாளர்களின் தளபதியான வீர கங்கன் அவர்கள் வெற்றிகொண்டார் என்பதாகும். இவரை கன்னட கல்வெட்டுகள் :-

''திகுலர் படையை வென்ற கண்டன்"

"திகுலர் கூட்டுப்படையை வென்ற கண்டன்"

"கங்கவாடி திகுலரை வென்ற வீர கங்கன்"

என்று குறிப்பிடுகின்றன. சோழ தளபதியான தகடூர் அதியமான் அவர்களை கன்னட கல்வெட்டுகள் "காடவ குல அதியமான்" (வன்னியர்) என்று குறிப்பிடுகின்றன. சோழ தளபதி திகுல தாமன் என்பவர் வன்னியர் என்பது அவரின் பெயரான "திகுலர்" (வன்னியர்) என்பதிலிருந்தே தெரியவருகிறது. சோழ தளபதி நரசிம்ம வர்மன் அவர்கள் "நுளம்ப பல்லவர்" (வன்னியர்) என்று தெரியவருகிறது. இதன் காரணமாகவே, ஒய்சாள தளபதி வீர கங்கன் அவர்கள் "திகுலரை வென்றவர்" (வன்னியரை வென்றவர்) என்று குறிப்பிடப்பட்டார்கள் என்பதாகும்.

திகுலர் என்பவர்கள் வன்னிய வம்சத்தவர்கள் ஆவர். இவர்கள் கர்நாடகத்தில் பெரும் எண்ணிக்கையில் வாழ்ந்து வருகிறார்கள் என்பதாகும். தர்மராஜா கோயிலின் திரௌபதி அம்மன் கரகவிழா என்பது வன்னிய வம்சத்தவர்களான திகுலர்கள் எடுக்கும் மிகச் சிறப்பான விழாவாகும். இந்த திரௌபதி அம்மன் கரகவிழாவானது கர்நாடக மாநிலத்தின் சிறப்பு மிக்க ஒரு விழாவாகும். 

கி.பி.1125 ஆம் ஆண்டின் கன்னட கல்வெட்டு ஒன்று, சோழர் என்று குறிப்பிட "திகுலர்" என்ற பெயரினை பயன்படுத்தியுள்ளது என்பதாகும். ஒய்சாள வேந்தர் வீரராமநாத தேவரின் கோலார் பகுதி மடிவளாகத்தில் இருக்கும் தமிழ் கல்வெட்டு ஒன்று, உலகுய்யவந்த பெருமாளுக்கு "முன்னாள் வன்னியர் காலம்" முதல் இருந்த கொடைகள் தொடர்வதாக குறிப்பிடுகிறது. இந்த முன்னாள் வன்னியர் காலம் என்பது "சோழர் காலம்" என்பதாகும்.

எனவே, திகுலர் பூமி/நாடு/மண்டலம் என்பது "வன்னியர் பூமி/நாடு/மண்டலம்" என்பதாகும். இதுவே மேற்குறிப்பிட்ட சான்றுகளின் அடிப்படையினில் மிகச் சரியானதாகும்.

வரலாற்று அறிஞர்கள் மேற்குறிப்பிட்ட சான்றுகளை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் ''திகுலர் பூமி/நாடு/மண்டலம்'' என்பதை ''தமிழர் பூமி/நாடு/மண்டலம்'' என்று பெரும் பிழையாக பதிவு செய்திருக்கிறார்கள் என்பதாகும்.
முரளி நாயக்கர் பதிவிலிருந்து






வன்னியர் நாடு (திகுலர் பூமி)
-----------------------------------------------

வேலூர் மாவட்டம், அகரத்தில் இருக்கும் விஜயநகர வேந்தர் மல்லிகார்ஜுன தேவ மஹாராயரின் கல்வெட்டு ஒன்று (கி.பி.1469) :-

"அகரம் பெருமாள் ஆனைகாத்த அப்பன் சிரிகாரியம் பாற்கும் வன்னிய திம்மய நாயக்கர்"

என்று குறிப்பிடுகிறது. இவரை "வன்னிய திம்மு நாயக்கர்" என்றும் கல்வெட்டு குறிப்பிடுகிறது. மேலும் இக் கல்வெட்டு "வன்னிய நாட்டு நாயகஞ் செய்வார்" என்று தெரிவிக்கிறது. இந்த "வன்னிய நாடு" என்பது வன்னியர்கள் அரசாட்சி செய்த நாடாகும்.

விஜயநகர காலத்திய கி.பி.1519 ஆம் ஆண்டு கல்வெட்டு ஒன்று, திருக்கோயிலூர் உள்ளிட்ட பகுதிகள் அடங்கிய "வன்னிய வட்டத்தில்", குதிரை காணிக்கை என்கிற வரியை வசூலித்து, அதை கோயில் நற்பணிக்காக தன்னுடைய மூத்த சகோதரி வயிச்சம்மன் பெயரினில் திம்மப்ப நாயக்கர் அவர்கள் கொடுத்தார்கள் என்றும் இவர் வாசல் மல்லப்ப நாயக்கரின் மகனாவார் என்றும் கல்வெட்டு தெரிவிக்கிறது.

ஆண்டு குறிப்பிடாத மற்றொரு கல்வெட்டு ஒன்று, திம்மப்ப நாயக்கர் அவர்கள், "வன்னியர் அரசாட்சி காலத்தில்" பெறப்படும் வரியை தன்னுடைய சகோதரி வயிச்சம்மன் அவர்களின் பெயரினில் ஒரு நற்கட்டளை ஏற்படுத்தினார்கள் என்பதை தெரிவிக்கிறது. எனவே, கல்வெட்டுகளில் இருந்து :-

"வன்னிய நாடு"

"வன்னிய வட்டம்"

"வன்னியர் அரசாட்சி காலம்"

என்று தெரியவருகின்றன. "திகுலர் பூமியை கைப்பற்றியவர்கள்" என்று விஜயநகர அரசர்களை கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. இதை அறிஞர் பெருமக்கள் "தமிழர் பூமியை கைப்பற்றியவர்கள்" என்று விளக்கம் கொடுத்துள்ளார்கள் என்பதாகும். ஆனால், இந்த விளக்கம் என்பது மிகப்பெரும் பிழையாகும். எந்த ஒரு சான்றும் தமிழர் பூமி/நாடு என்று சொல்லவே இல்லை என்பதாகும்.

கி.பி.1233 ஆம் ஆண்டின் ஓய்சாள கன்னட கல்வெட்டு ஒன்று, காடவராயரிடம் இருந்து மூன்றாம் ராஜராஜ சோழனை மீட்ட தளபதிகளான அப்பண்ணா மற்றும் கோப்பையா ஆகியோரைப் பற்றி குறிப்பிடுகிறது. இதில் மிக குறிப்பாக அப்பண்ணா அவர்கள் "திகுல மண்டலத்தை கொள்ளையிட்டவர்" என்று குறிப்பிடப்பட்டார்கள் என்பதாகும்.

இந்த கன்னட கல்வெட்டு குறிப்பிடும் "திகுல மண்டலம்" என்பது வன்னியர்களான காடவராயர்கள் அரசாட்சி செய்த பகுதியாகும். இந்த கருத்தை உறுதிப்படுத்தும் விதமாக, கி.பி.14 ஆம் நூற்றாண்டின் "மதுரா விஜயம்" ஒன்பதாம் காண்டம் சுலோகம் - 28, வன்னிய அரசர்களை பற்றி தெரிவிக்கிறது :-

சுலோகம் - 28 : "வீர கம்பண்ணரின் வில்லில் இருந்து புறப்பட்ட அம்புகள் ஸர்ப்பங்களைப்போல் சீறிக்கொண்டு பாய்ந்து வந்தன. அவ்வாறு அவை பாய்ந்து சென்றபோது கேரள மக்களின் மூச்சுக் காற்றையும், வன்னிய மன்னர்களின் நாட்டை நாசம் செய்த தீயைப் போலவும், ஆந்திர தேசத்தை தகிக்கும் சூரியன் போலவும் காணப்பட்டன"

மதுரா விஜயத்தின் மேற்குறிப்பிட்ட சுலோகம் - 28, மிகத் தெளிவாக "கேரள மக்களின் நாட்டையும்", "தமிழக மக்களின் நாட்டையும்", "ஆந்திரா மக்களின் நாட்டையும்" என்று குறிப்பிடுகிறது. இதில் "தமிழ்நாடு" என்று குறிப்பிடுவதற்கு பதிலாக "வன்னிய மன்னர்களின் நாடு" என்றே குறிப்பிடுகிறது.

கன்னட நாட்டில் இருந்த சோழர்களின் தலைக்காட்டுப் (தழைக்காடு) பகுதியை அரசாட்சி செய்த சோழ சாமந்தர்களான "தகடூர் அதியமான்", "திகுல தாமன்", "நரசிம்ம வர்மன்" ஆகியோரை ஓய்சாளர்களின் தளபதியான வீர கங்கன் அவர்கள் வெற்றிகொண்டார் என்பதாகும். இவரை கன்னட கல்வெட்டுகள் :-

''திகுலர் படையை வென்ற கண்டன்"

"திகுலர் கூட்டுப்படையை வென்ற கண்டன்"

"கங்கவாடி திகுலரை வென்ற வீர கங்கன்"

என்று குறிப்பிடுகின்றன. சோழ தளபதியான தகடூர் அதியமான் அவர்களை கன்னட கல்வெட்டுகள் "காடவ குல அதியமான்" (வன்னியர்) என்று குறிப்பிடுகின்றன. சோழ தளபதி திகுல தாமன் என்பவர் வன்னியர் என்பது அவரின் பெயரான "திகுலர்" (வன்னியர்) என்பதிலிருந்தே தெரியவருகிறது. சோழ தளபதி நரசிம்ம வர்மன் அவர்கள் "நுளம்ப பல்லவர்" (வன்னியர்) என்று தெரியவருகிறது. இதன் காரணமாகவே, ஒய்சாள தளபதி வீர கங்கன் அவர்கள் "திகுலரை வென்றவர்" (வன்னியரை வென்றவர்) என்று குறிப்பிடப்பட்டார்கள் என்பதாகும்.

திகுலர் என்பவர்கள் வன்னிய வம்சத்தவர்கள் ஆவர். இவர்கள் கர்நாடகத்தில் பெரும் எண்ணிக்கையில் வாழ்ந்து வருகிறார்கள் என்பதாகும். தர்மராஜா கோயிலின் திரௌபதி அம்மன் கரகவிழா என்பது வன்னிய வம்சத்தவர்களான திகுலர்கள் எடுக்கும் மிகச் சிறப்பான விழாவாகும். இந்த திரௌபதி அம்மன் கரகவிழாவானது கர்நாடக மாநிலத்தின் சிறப்பு மிக்க ஒரு விழாவாகும். 

கி.பி.1125 ஆம் ஆண்டின் கன்னட கல்வெட்டு ஒன்று, சோழர் என்று குறிப்பிட "திகுலர்" என்ற பெயரினை பயன்படுத்தியுள்ளது என்பதாகும். ஒய்சாள வேந்தர் வீரராமநாத தேவரின் கோலார் பகுதி மடிவளாகத்தில் இருக்கும் தமிழ் கல்வெட்டு ஒன்று, உலகுய்யவந்த பெருமாளுக்கு "முன்னாள் வன்னியர் காலம்" முதல் இருந்த கொடைகள் தொடர்வதாக குறிப்பிடுகிறது. இந்த முன்னாள் வன்னியர் காலம் என்பது "சோழர் காலம்" என்பதாகும்.

எனவே, திகுலர் பூமி/நாடு/மண்டலம் என்பது "வன்னியர் பூமி/நாடு/மண்டலம்" என்பதாகும். இதுவே மேற்குறிப்பிட்ட சான்றுகளின் அடிப்படையினில் மிகச் சரியானதாகும்.

வரலாற்று அறிஞர்கள் மேற்குறிப்பிட்ட சான்றுகளை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் ''திகுலர் பூமி/நாடு/மண்டலம்'' என்பதை ''தமிழர் பூமி/நாடு/மண்டலம்'' என்று பெரும் பிழையாக பதிவு செய்திருக்கிறார்கள் என்பதாகும்.