Wednesday 26 October 2016

அமராவதிபுரவேஸ்வரா நிகலாங்கமல்லா மகாமண்டலேஸ்வர வன்னி குல கர்க்கராசா

கல்யாணி சாளுக்கிய மன்னர் ஆறாம் விக்கிரமாதித்தியனின் (கி.பி.1076 - 1126) கன்னட மொழி கல்வெட்டுகள் மகாராஷ்டிரா மாநிலம், நந்தேத் மாவட்டம், கரத்கேள் என்னும் ஊரில் உள்ளது. அக் கல்வெட்டுகளில் ஒன்று (A.R.E No.184 of 1958 - 59) சாளுக்கிய வம்சாவழி மன்னர்கள் திருபுவனமல்லா வரைக்கும் குறிப்பிட்டுவிட்டு வன்னிய குல மன்னர்களின் வம்சாவழியையும் குறிப்பிடுகிறது.














அந்த வன்னிய குல வம்சாவழி மன்னர்களில் ஒருவரான "அமராவதிபுரவேஸ்வரா நிகலாங்கமல்லா மகாமண்டலேஸ்வர கர்க்கராசா" என்பவர் கரத்கேள் என்னும் ஊரில் இருக்கும் சோமேஸ்வர கடவுளுக்கு கோயில் ஒன்றை கட்டியுள்ளார்கள்.
வன்னிய குல மன்னர் மகாமண்டலேஸ்வர கர்க்கராசாவின் மற்றொரு கல்வெட்டில் (A.R.E No.187 of 1958 - 59), அவர் பல கோயில்களை கட்டியுள்ளார்கள் என்பதை குறிப்பிடுகிறது. குறிப்பாக :-
"சுயம்பு சோமநாததேவர் கோயில்"
"தோரேஸ்வரதேவர் கோயில்"
"கலிச்சோரேஸ்வரதேவர் கோயில்"
"பிரசன்ன பைரவதேவர் கோயில்"
போன்றவைகளாகும். இதில் "தோர ராஜா", "கலிச்சோர ராஜா" போன்ற பெயர்கள் அக்னி குல மகாமண்டலேஸ்வர கர்க்கராசாவின் முன்னோர்களது பெயர்களாகும். இக் கோயில்களின் வழிப்பாட்டிற்கும், நிவேதனத்திற்கும், பராமரிப்பு பணிகளுக்கும், சன்யாசிகளுக்கும் மற்றும் பிராமணர்களுக்கு உணவளிக்கவும், பிராமணர்களின் கல்விக்கும், நிலங்களை கொடையாக கொடுத்துள்ளார் வன்னிய குல மன்னர் மகாமண்டலேஸ்வர கர்க்கராசா அவர்கள்.
"மகாமண்டலேஸ்வர கர்க்கராசா" அவர்களை, மகாராஷ்டிரா மாநிலம், நந்தேத் மாவட்டம், தேகுலூர் தாலுக்காவில் இருக்கும் கல்யாணி சாளுக்கிய மன்னர் புவனேகமல்லா இரண்டாம் சோமேஸ்வரனின் கல்வெட்டு (கி.பி. 1070) ஒன்று "அமராவதிபுரவேஸ்வரா" (Amaravatipuravesvara) என்றும் "நிகலாங்கமல்லா" (Nigalankamalla) என்றும் குறிப்பிடுகிறது.
இந்த "அக்னி குல வன்னிய பரம்பரை மன்னர்களை", ஆய்வாளர்கள் கல்யாணி சாளுக்கியர்களின் வம்சாவழியினர்கள் என்று குறிப்பிடுகிறார்கள். இவர்கள் கல்யாணி சாளுக்கியர்களிடம் குறுநில மன்னர்களாக இருந்திருக்கிறார்கள். இவர்களுடைய ஆட்சிப்பகுதியில் 20,000 கிராமங்கள் அடங்கியிருந்ததாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள் :-
The Karadkhel inscriptions shows that the chiefs of the "Fire Family" were the subordinates of the Later Chalukya Kings of Kalyana and that they were ruling over the territory including the area around Karadkhel and Hottal probably called "the Yerga district" or "Yerga-1000" in our epigraph. The entire terriroty of the "Fire Race" chiefs, stated to have consisted of twenty thousand villages, probably contained several vishayas like Yera. (Epigraphia Indica, Vol-XXXV, No.21, Page-163)
----- xx ----- xx ----- xx -----
மேலை சாளுக்கியர்கள் மற்றும் கீழைச் சாளுக்கியர்கள் என்பவர்கள் ஒருவரே ஆவார்கள். சோழப் பெருவேந்தன் முதலாம் குலோத்துங்கச் சோழன் கீழைச் சாளுக்கிய மரபினன் ஆவான். இவர்களுடைய மரபினர்களுக்கு (பிச்சாவரம் சோழர்கள்) தான் சென்ற நூற்றாண்டிலும் தில்லை வாழ் அந்தணர்கள் திருமுடிச்சூட்டினார்கள். தில்லை திருநகரில் திருமுடிச்சூடிய இரண்டாம் குலோத்துங்கச் சோழனை, கவிச் சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் பெருமானார் அவர்கள் "தீக்கோன்" என்று குலோத்துங்க சோழன் உலாவில் குறிப்பிடுகிறார்கள். சோழப் பெருவேந்தன் மூன்றாம் ராஜ ராஜ சோழனை, அண்ணமங்கலம் கல்வெட்டு "வன்னிய மணாளன்" (வன்னிய மாப்பிள்ளை) என்று குறிப்பிடுகிறது. சாளுக்கியர்கள் தங்களை "வேள் குல சாளுக்கியர்கள்" (வேளிர் குலத்தவர்கள்) என்று கல்வெட்டுகளில் குறிப்பிடுகிறார்கள். எனவே சாளுக்கியர்கள் என்பவர்கள் பண்டைய வேளிர் குலத்தவர்கள் ஆவார்கள். இவர்களை தான் சங்கத் தமிழ் புலவர் கபிலர் அவர்கள் புறம் பாடலில் குறிப்பிட்டுள்ளார்கள். வடபால் முனிவனின் ஓமகுண்டத்தினில் தோன்றிய வேளிர் மன்னர்கள் என்று.
----- xx ----- xx ----- xx -----

தில்லை வாழ் அந்தணர்களால் வரவேற்கப்படும் சோழ மன்னர்கள்

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, சோழப் பெருவேந்தன் ராஜ ராஜ சோழன் அவர்கள், தங்களது குல தெய்வ கோயிலான சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வழிபாடு செய்ய குடும்பத்தோடு வந்தபோது, தில்லை வாழ் அந்தணர்கள், அவர்களை வரவேற்ற ஓவியக் காட்சிகள் தஞ்சை பெரிய கோயிலில் உள்ளது.








ஆயிரம் ஆண்டுகள் கடந்து, இந்த நூற்றாண்டிலும் சோழ மன்னர்களின் வாரிசுகளான பிச்சாவரம் சோழ மன்னர்களுக்கு மரியாதை கொடுக்கும் தில்லை வாழ் அந்தணர்கள். வாழ்க க்ஷத்ரிய வம்சத்து பிச்சாவரம் சோழ மன்னர்கள்.
இப்படி சான்றுகள் ஏதும் இல்லாமல், க்ஷத்ரிய வம்சத்தில் பிறக்காத திருமங்கை ஆழ்வார் / கண்ணப்ப நாயனார் வம்சத்தவர்களும், உழவு தொழிலை தங்களது குலத் தொழிலாக கொண்டவர்களும், இன்னும் சிலரும், தாங்கள் தான் சோழர்களின் வம்சத்தவர்கள் என்று மாய்ந்து மாய்ந்து சுவர் விளம்பரம் செய்கிறார்கள். ஊர் முழுவதும் கலர் கலராக போஸ்டர்கள் ஓட்டுகிறார்கள். இவர்கள் எல்லாம் சோழர்கள் காலத்தில் இப்படி செய்திருக்க முடியுமா ? கங்கைகொண்ட சோழபுரம் அரண்மனையில் நுழைவதற்க்கே அனுமதி பெற்றிருப்பார்கள்.
நீங்கள் எல்லாம் எந்த வகையில் சோழர்களுக்கு உரிமை கொண்டாடுகிறீர்கள் என்று கேட்டால், அவர்களிடம் பதில் இல்லை. ஏதேதோ கற்பனை கதைகளை சொல்லுகிறார்கள்.
சோழ பெருவேந்தர்களுக்கு சம்மந்தி முறையுள்ள வன்னிய குல காடவராயர்கள் (கச்சியராயர்கள்) இன்றும் இருக்கிறார்களே, அவர்களுக்கு நீங்கள் உறவினர்களா ? என்று கேட்டால், பேந்த பேந்த என்று முழிக்கிறார்கள். பிறகு எப்படி நீங்கள் சோழர்களுக்கு உரிமை கொண்டாடமுடியும் என்று கேட்டால், "புத்தகத்தில் இருக்கிறது" என்று சொல்லுகிறார்கள். என்ன இருக்கிறது புத்தகத்தில் என்று கேட்டால், அதான் இருக்கிறதே புத்தகத்தில் என்று சொல்லி விட்டு, "மாமன்னர் ராஜ ராஜ சோழனின் வாரிசுகளே வருக வருக" என்று சுவர் விளம்பரம் செய்ய சென்றுவிடுகிறார்கள்.
அட கஷ்டமே. விட்டால் இவர்கள் இதே பாணியில் "மாமன்னர் அலெக்சாண்டருக்கு" கூட உரிமை கொண்டாடிவிடுவார்கள் போல.
----- xx ----- xx ----- xx -----

சோழர்களும் சாளுக்கியர்களும் தொன்று தொட்டு உறவினர்களே !

முதலாம் குலோத்துங்கச் சோழனது காலத்தில் இருந்தே சாளுக்கியர்கள் சோழப் பேரரசில் இருக்கிறார்கள் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால் அது அவ்வாறு இல்லை என்பதை கீழ்காணும் சான்றுகள் உறுதிசெய்கின்றன :-




முதலாம் அதித்த சோழன் (கி.பி.871 - 907), பட்டத்தரசிகள் 

===================================================

"காடுவெட்டிகள் திரிபுவன மாதேவி வயிரியக்கன்". (இவள் ஒரு பல்லவ அரசி மற்றும் காடவ கோப்பெருஞ்சிங்கனின் முன்னோர்கள்).
"இளங்கோப்பிச்சி" என்பவள் இராஷ்டிரகூட மன்னன் இரண்டாம் கிருஷ்ணன் மகள்.

முதலாம் பராந்தக சோழன் (கி.பி. 907 - 955)

========================================
"பராந்தக சோழனின் புதல்வி வீரமாதேவி இராஷ்டிரகூட மன்னன் நான்காம் கோவிந்த வல்லவரையனை மணந்தாள்"
"பராந்தக சோழனின் மற்றொரு புதல்வி அனுபமா கொடும்பாளூர்ச் வேளிர் அரசனை மணந்தாள்"


கண்டராதித்த சோழன் (கி.பி. 950 - 957) பட்டத்தரசி

==============================================

"மழவர் குலத்து செம்பியன் மாதேவியார்"


இரண்டாம் பராந்தக சோழனான சுந்தர சோழன் (கி.பி. 957 - 970)
===================================================
"அரிஞ்சயனுக்கும் வைதும்பக் குடியில் வந்த கல்யாணிக்கும் பிறந்தவர் சுந்தர சோழன்"
"சுந்தர சோழன் பட்டத்தரசியான வானவன் மாதேவி திருக்கோவிலூர் மலையமான் மகள்".
"சுந்தர சோழன் தன் மகள் குந்தவையைக் கிழைச் சாளுக்கிய மரபினன் வல்லவரையன் வந்தியதேவனுக்கு திருமணம் செய்து கொடுத்தார்".
உத்தம சோழன் (கி.பி. 973 - 985) பட்டத்தரசிகள்
===========================================
"இருங்கோளர் மகள் வானவன் தேவி"
"விழுப்பரையர் மகளாகிய கிழானடிகள்"
The "Vilupparaiyar" are "Vanniyas". The present "Viluppuram District" got the name from the "Vanniyar Chieftains Vilupparaiyar", who ruled that area during imperial cholas times. "விழுப்புண் பெற்ற அரையர்கள் (விழுப்பரையர்கள்)". The inscription evidences for the same :-
"This epigraph contains two portions, one in Sanskrit and the other in Tamil. The former engraved in Grantha characters records that Kotacholaka Vimana originally built of brick was now rebuilt of stone by Sendan (Jayantan) Poyakapati. The Tamil portion which is incomplete while recording the same fact describes him as Kumari Sendan alias Jayangondasola Vilupparaiya Nadalvan, a kudippalli of Poypakkam in Panaiyur-nadu in Rajendrasola-valanadu". (S.I.I. Vol-XVII, No.227), (Tiruvakkarai, Viluppuram District, Varadaraja Perumal shrine in the Chandramaulisvara temple), (Adhirajendra Chola, 1068-69 A.D).
"This seems to record some gift made by Kudippalli Sendan Nagan alias Rajendrasola Viluppadirasan of Poygaipakkam, in Panaiyur-nadu in Rajendrasola-valanadu for the merit of his younger brother Sendan Karanai alias Kidarattaraiyan" (S.I.I. Vol-XVII, No.223), (Tiruvakkarai, Viluppuram District, Varadaraja Perumal shrine in the Chandramaulisvara temple), (Kulottunga Chola-I, 1096-97 A.D).
முதலாம் ராஜ ராஜ சோழன் (கி.பி. 985 - 1012)
=========================================
"ராஜ ராஜ சோழன் தன் மகள் குந்தவையை கீழைச் சாளுக்கிய மரபினனும் வேங்கி நாட்டின் அரசனுமான விமலாதித்தனுக்கு திருமணம் செய்து கொடுத்தார்"
முதலாம் ராஜேந்திர சோழன் (கி.பி. 1012 - 1044)
===========================================
"ராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கைதேவி. அவள், ராஜ ராஜ சோழனின் மகளும் தன் தந்தை ராஜேந்திர சோழனின் உடன்பிறப்புமான குந்தவை, விமலாதித்தன் ஆகியோரின் மகன் இராஜ ராஜ நரேந்திரன் என்னும் இளவரசனை மணந்தாள். வேங்கி நாட்டில் வாழ்ந்த இவளுடைய மகன் தான் முதலாம் குலோத்துங்க சோழன்"
இரண்டாம் குலோத்துங்க சோழன் "தீக்கோன் நிகழ்நிலா அன்று நிருப குல துங்கன்" என்று குலோத்துங்க சோழனுலாவில் குறிப்பிடப்பட்டுள்ளான். அதாவது அவன் "அக்கினியில் தோன்றிய க்ஷத்திரிய குலத்தவன்" என்று உலா குறிப்பிடுகிறது. "நிருப குலம்" என்பது "அரச குலம்" அதாவது "க்ஷத்திரிய குலம்".
----- xx ----- xx ----- xx -----

புவி ஆளப்பிறந்த க்ஷத்ரியர்கள்

பிச்சாவரம் சோழ மன்னர்கள் தங்களை "க்ஷத்ரியர்கள்" என்றே ஆவணங்களில் குறிப்பிட்டனர். சோழர்களுக்கு திருமுடிசூட்டும் தில்லைவாழ் அந்தணர்கள், வன்னியர்களான பிச்சாவரம் சோழ அரசர்களை "சக்கரவர்த்தி" என்றே அழைத்தனர். எனவே "சக்கரவர்த்தி" என்றால் "க்ஷத்ரியர்" என்பதாகும். சமஸ்கிருத மான்மியங்களான பார்த்தவன மான்மியத்திலும், ராஜேந்திரபுர மான்மியத்திலும், பிச்சாவரம் சோழ அரசன் "வீர வர்ம சோழன்" அவர்கள் "வர்மன்" (க்ஷத்ரியன்) என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள்.




நூற்றுக்கணக்கான சோழர் காலக் கல்வெட்டுகள், வன்னிய அரசர்களான (பள்ளி) "காடவராயர்", "சம்புவராயர்", "நீலகங்கரையர்" போன்றோரைப் பற்றி குறிப்பிடுகின்றன :-
"சகலபுவனச் சக்கரவர்த்தி" என்றும்
"சகலலோகச் சக்கரவர்த்தி" என்றும்
"ராஜகம்பீரன்" என்றும்
"அரசகளாலையன்" என்றும்
"புவிஆளப்பிறந்தன்" என்றும்
"அச்சலவீமன் அரசர் தலைவன்" என்றும் குறிப்பிடுகின்றன.
இவர்கள் அனைவரும் "சோழ வேந்தர்களுக்கு" மிகவும் நெருங்கிய "உறவுக்காரர்கள்" ஆவார்கள். கி.பி. 12 ஆம் நூற்றாண்டில், இரண்டாம் இராசாதிராச சோழனின் (கி.பி. 1163 - 1178) ஆட்சிக் காலத்தில் சோழர்களின் தலைமை படைத் தளபதியாக (Commander-in-Chief for Cholas Army) விளங்கிய வன்னியனான (பள்ளி) "எதிரிலிச் சோழ சம்புவராயன்" அவர்கள், காஞ்சிபுரத்து கல்வெட்டில் சோழ மன்னர்களை பற்றி குறிப்பிடும்பொழுது "எங்கள் வம்சத்தவர்கள்" என்றே குறிப்பிடுகிறார்கள்.
தில்லைச் சிற்றம்பலவாணருடைய ஏகபக்தனான "மூன்றாம் குலோத்துங்கச் சோழன் (கி.பி. 1178 - 1218) அவர்கள், தனது மகளை வன்னியனான (பள்ளி) "சகலபுவனச் சக்கரவர்த்தி காடவராய கோப்பெருஞ்சிங்கப் பல்லவன்" அவர்களுக்கு, தில்லை நடராஜர் கோயிலில் வைத்து திருமணம் செய்துகொடுத்தார்கள் என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது. க்ஷத்ரியனான சோழ மன்னன் தனது மகளை ஒரு "க்ஷத்ரியனுக்கு" தான் திருமணம் செய்து கொடுப்பான் என்பது வரலாறு ஆகும்.
"க்ஷத்ரிய மங்கையரை" மட்டுமே சோழர்கள் தங்களது "பட்டத்தரசியாக" கொண்டிருந்தனர் என்பது வரலாறாகும். பிற்காலச் சோழப் பேராசை தோற்றுவித்த "விஜயாலய சோழன்" (கி.பி. 848 - 881) அவர்களின் மகனான "ஆதித்த சோழன்" (கி.பி. 871 - 907) அவர்கள், வன்னியர்களான காடவராயர் வம்சத்தைச் சேர்ந்த "காடுவெட்டிகள் திரிபுவனமாதேவி வயிரியக்கன்" என்ற "க்ஷத்ரிய மங்கையை" திருமணம் செய்துக்கொண்டார்கள்.
முதலாம் குலோத்துங்கச் சோழன் (கி.பி. 1070 - 1120) அவர்கள், வன்னியர்களான காடவராயர் வம்சத்தைச் சேர்ந்த "காடவன் மாதேவி", "கம்பமாதேவி" ஆகியோரை திருமணம் செய்துகொண்டார்கள்.
வன்னியர்களான நீலகங்கரையர் வம்சத்தை சேர்ந்த "நீலகங்கன் அச்சலவீமன் அரசர் தலைவன்" அவர்கள், தனது மகள் "வில்லன் மாதேவியை", முதலாம் குலோத்துங்கச் சோழனின் மகனுக்கு திருமணம் செய்துகொடுத்தார்கள் என்று திருவல்லம் கல்வெட்டு (கி.பி. 1092) தெரிவிக்கிறது. முதலாம் குலோத்துங்கச் சோழனின் மகனான "வீர சோழ தேவர்" அவர்கள் "வேங்கி நாட்டின்" (சாளுக்கிய நாடு) அரசர் ஆவார்கள்.
எனவே வன்னியர்களான "சோழர்கள்", "காடவர்கள்", "சம்புவராயர்கள்", "நீலகங்கரையர்கள்" அனைவரும் "க்ஷத்ரியர்கள்" ஆவார்கள். நம்மவர்கள் இதையெல்லாம் தெரிந்து பெரும் மகிழ்ச்சி, கொள்ளவேண்டும். நம் முன்னோர்கள் பெரும் புகழோடு வாழ்ந்ததைப் போல நாமும் வாழவேண்டும்.
க்ஷத்ரியர்கள் மட்டுமே சோழ மன்னர்களின் சத்யவிழாவினை கொண்டாடவேண்டும். மற்றவர்கள் க்ஷத்ரியர்களின் சதய விழாவினை கொண்டாடுவது என்பது நகைச்சுவையான செயலாகும்.
----- xx ----- xx ----- xx -----

வன்னி குடி உடையார் ஸ்ரீ ராஜேந்திர சோழ தேவர்

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்ப்பேட்டை வட்டத்தில் உள்ள ஏலவானாசூர்க்கோட்டை கோயிலில் உள்ள முதலாம் ராஜேந்திர சோழனின் கல்வெட்டு ஒன்று (கி.பி.1025) கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது :-
"ஸ்வஸ்திஸ்ரீ திருமந்நி வளர இருநிலமடந்தையும் எந்நும் ஸ்ரீ மைக்கீர்த்தி எழுதி உடையார் ஸ்ரீராஜேந்தரசோழ தேவற்கு யாண்டு 13 ஆவது ராஜராஜப்பாண்டி நாட்டுக் கீழ்ச்செம்பி நாட்டு வந்நி குடி உடையார் ஸ்ரீ ராஜேந்திர தேவர் அதிகாரிகள் கிழவந் சதுர நாராயந வாநவந் மூவேந்த வேளார்" (A.R.E No.135 of 1906).
சோழ பெருவேந்தன் முதலாம் ராஜேந்திர சோழன் அவர்கள், "வந்நி குடி உடையார்" (வன்னி குடி உடையார்) என்று கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறார். இந்த மிக முக்கியமான சான்று என்பது முதலாம் ராஜேந்திர சோழன் அவர்களை, "வன்னிய குலத்தவர்" என்பதை உறுதிப்படுத்துகிறது.
வன்னி குடி உடையார் ஸ்ரீ ராஜேந்திர சோழனின் அதிகாரிகள் ராஜராஜப்பாண்டி நாட்டுக் கீழ்ச்செம்பி நாட்டில் இருந்ததை மேற்குறிப்பிட்ட கல்வெட்டு தெரிவிக்கிறது. மேலும் அக் கல்வெட்டு "வன்னி குடி" என்பதைப் பற்றியும் தெரிவிக்கிறது. அதாவது "வன்னிய இன மக்களைப்" பற்றி தெரிவிக்கிறது. ஏற்கனவே திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் கல்வெட்டுகள் மலையமான் மன்னர்களை "வன்னிய மக்கள் நாயன்" (வன்னிய மக்களின் தலைவன்) என்று குறிப்பிடுகின்றன.
இதன் மூலம் சோழ பெருவேந்தர்களும் அவர்களின் உறவினர்களான மலையமான்களும் "வன்னிய குல க்ஷத்ரிய" சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது உண்மையாகிறது. எனவே தான் வன்னியர்களான பிச்சாவரம் சோழ மன்னர்களுக்கு தில்லை வாழ் அந்தணர்கள் திருமுடிசூட்டுகிறார்கள். சோழ மன்னர்களுக்கு மட்டுமே திருமுடிசூட்டுபவர்கள் அவர்கள்.
சோழ மன்னர்களும் அவர்களின் வம்சத்தினர்களும் "வன்னிய குல க்ஷத்ரியர்கள்" என்பது மேற்குறிப்பிட்ட ஏலவானாசூர்க்கோட்டை கல்வெட்டின் மூலம் உறுதியாகிறது.
----- xx ----- xx ----- xx -----







Monday 17 October 2016

மகாபாரதம் குறிப்பிடும் அக்னி புத்திரன் சம்பு

பண்டைய மகாபாரதம் அக்னி புத்திரனான சம்புவைப் பற்றி குறிப்பிடுகிறது. இதுவே மிகப் பழமையான சான்றாகும். மேலும், சங்கத் தமிழ் புறம் - 201 பாடலிலும் அக்னியில் தோன்றிய வேளிர்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. வடபால் முனிவர் என்ற சம்பு மாமுனிவரின் அக்னிகுண்டத்தில் தோன்றியதால் "சம்பு புத்திரர்கள்" எனப்பட்டனர்.


மகாபாரதம், ஆரண்ய பருவம், 220-வது அத்தியாயம், மார்க்கண்டேய சருக்கம், 5-வது ஸ்லோகம் :-
"அக்நிச்சாபி மநுர்நாம ப்ரஜா பத்யமகாரயத்
சம்புமக்நி மதப் ராஹீ : பிராம்மணா வேதபாரகா : "
விளக்கம் : வேதத்தில் மிகவல்ல பிராமணர்கள் சம்பு என்ற அக்னி புத்திரனுடைய பிரதாபங்களைப் பற்றிப் பேசத் தொடங்கினார்கள்.
அக்னியே அரசகுடிகளின் மூலமாகும். இதை மகாபாரதம் உறுதிப்படுத்துகிறது. மகாபாரதம், ஆதிபருவம், காண்டவதகன சர்க்கம் 231-வது அத்தியாயத்தில், மண்டபால மகரிஷி என்பவர் அக்கினியைப் பற்றி கிழ்க்கண்டவாறு புகழ்ந்துள்ளார் :-
"ஓ அக்கினியே ! நீதான் இரண்டு
அஸ்வினிகளாகவும் இருக்கிறாய் !
நீயே சூரியன் ! நீயே சந்திரன் !
நீயே வாயு ! "
மேலும் தமிழ் இலக்கியமான விஸ்வபுராண சாரம் "சம்புமா முனிவன் வேள்வி தழல் தருமரபில் வந்தோன்" என்று குறிப்பிடுகிறது. சோழர் கால பல கல்வெட்டுகள் "சம்பு குலத்தவர்களான வன்னியர்கள்" பற்றி குறிப்பிடுகிறது.
கி.பி. 1463 ஆம் ஆண்டின் செப்பு பட்டயம், விஜயநகர வேளிர் குல அரசர் மல்லிகார்ஜுன தேவ மகாராயரை "சம்புமா முனியார் யாகத்தில் அவதரித்தானவர்" என்று குறிப்பிடுகிறது.
சிலர் பல கேள்விகளை கேட்கிறார்கள். எங்கள் குடிகளுக்கு ஒன்று அல்லது இரண்டு பெயர்கள் தான் இருக்கிறது, அரச குடிகளுக்கு மட்டும் ஏன் பல்வேறு பெயர்கள் இருக்கிறது என்று கேட்கிறார்கள். அரசகுடிகள் "மகா புருஷர்கள்" ஆவார்கள். எனவே அவர்களுக்கு பல்வேறு நாமங்கள் இருப்பது இயல்பானதேயாகும். மேலும் அரசகுடிகளின் பல்வேறு கிளை குடிகளும் "அக்னி புராணத்தை" அவர்களின் குல முனிவர்களின் பெயராலும் வழங்கினர். குறிப்பாக "வசிஷ்டர்", "காசியப", போன்றோர். ஆனால் அடிப்படை என்பது "தீயவைகளை அழிப்பதற்காக க்ஷத்ரியர்கள் புனித அக்னியில் தோன்றினார்கள்" என்பதாகும்.
இந்த உயர்குடி "அக்னி பிறப்பு" என்பது இந்தியாவில் மட்டுமில்லாமல் உலகின் பல்வேறு நாடுகளிலும் இருக்கிறது. இஸ்லாமியர்களின் புனித நூலான "திருக்குரானிலும்" இதுபற்றி சொல்லப்பட்டுள்ளது.
----- xx ----- xx ----- xx -----

வேளிர் ஹொய்சாளர்கள் வடஇந்திய யது வம்ச யாதவர்கள் (மகாபாரத க்ஷத்ரியர்கள்)

சங்கத் தமிழ் புறநானூறு பாடலில் (பாடல் 201 & 202) குறிப்பிடப்படும் "துவாரகை நகரம்" என்பது மகாபாரதத்தில் குறிப்பிடப்படும் "துவாரகை நகரமாகும்". அந்த நகரத்தினை கடல் அழித்துவிட்டது. அந்த நகரம் சிந்து சமவெளிப் பகுதியின் அங்கமாகும்.



வேளிர் குல அரசன் "இருங்கோவேள்" அவர்களின் முன்னோர்கள் மேற்குறிப்பிட்ட நகரத்தில் இருந்து வந்தவர்கள் என்று சங்கத் தமிழ் புலவர் கபிலர் அவர்கள் மிகத் தெளிவாக புறம் பாடலில் குறிப்பிடுகிறார்கள்.
பிற்காலத்தில் ஆட்சிசெய்த ஹோய்சால அரசர்களும் தங்களை சந்திர குல யாதவர்களான ராஷ்டிரகூடர்களைப் போலவே வடஇந்தியாவின் யது குல யாதவர்களின் வம்சாவழியினர் என்று தெரிவிக்கிறார்கள் :-
The Hoysalas also claim their descent from "Yadukula" i.e,, Lunar race of the North India, like those of the Rashtrakutas of the Yadavas.
ஹோய்சால அரசர்களே தங்களை வடஇந்தியாவில் இருந்து வந்த "யது குல யாதவர்கள்" என்று குறிப்பிடுகிறார்கள். எனவே புறம் பாடல் குறிப்பிடும் "துவாரகை" என்பது "சிந்து சமவெளி பகுதியின் துவாரகையாகும்" என்பது உண்மையாகிறது.
----- xx ----- xx ----- xx -----

புறநானூறு பாடல் குறிப்பிடும் வேளிர் அரசர்களின் தோற்றம்




பலருக்கு புறம் 201 பாடல் என்றாலே பயம் வந்துவிடும். உடனே அவர்கள் அது "அக்னி குண்டம் இல்லை", நான்கு மலைகளின் இடைப்பட்ட பகுதி என்று சம்பந்தமே இல்லாத கருத்தை வலிந்து சொல்லுவார்கள்.
தடவு என்றால் "ஓமகுண்டம்" என்பது தான் பொருளாகும். பல சான்றுகள் க்ஷத்ரியர்கள் "ஓமகுண்டத்தில் இருந்து பிறந்தார்கள்" என்று சொல்வதால், தடவு என்பது "ஓமகுண்டமே" ஆகும்.
யாரவது நான்கு மலையின் இடையில் தோன்றுவார்களா ? சங்கத் தமிழ் புலவர் கபிலர் என்ன அறிவு இல்லாதவரா ?
புலவர் கபிலர் சொன்னது "நானோ அந்தணன், நீயோ வடபால் முனிவன் தடவினுள் தோன்றி" என்று தான் சொன்னார்கள். அதாவது நான் "பிராமணன்", நீயோ "அக்னி குண்டத்தில் தோன்றிய க்ஷத்ரியன்" என்று தான் சொன்னார்கள் :-
"பறம்பிற் கோமான்
நெடுமாப் பாரி மகளிர் யானே
தந்தை தோழ னிவரென் மகளிர்
அந்தணன் புலவன் கொண்டுவந் தனனே
நீயே, வடபான் முனிவன் றடவினுட் டோன்றிச்
செம்புபுனைந் தியற்றிய சேணெடும் புரிசை
உவரா வீகைத் துவரை யாண்டு
நாற்பத் தொன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே விறற்போ ரண்ணல்"
பொய் சொல்வதற்கும் ஒரு அளவு இருக்கிறது என்பதை நண்பர்கள் அறியவேண்டும்.

புறநானூறு 201-வது பாடல் குறிப்பிடும் தடவு என்பது ஓமகுண்டமே ஆகும்






புறநானூறு பாடலில் வரும் "வடபால் முனிவன் தடவினுள் தோன்றி வேளிர்கள்" என்பதற்கு உரைவேந்தர் ஒளவை துரைசாமிப் பிள்ளை ஐயா அவர்கள், "நான்கு மலைகளுக்கு நடுவே உள்ள நிலப்பரப்பில் தோன்றிய வேளிர்கள்" என்று விளக்கம் கொடுத்தார்கள். ஆனால் உண்மையில் "வடபால் முனிவனது ஓமகுண்டத்தில் தோன்றிய வேளிர்கள்" என்பது தான் அர்த்தமாகும்.
"தடவு" என்பது "ஓமகுண்டத்தை" குறிக்காது என்றும் அது "நான்கு மலையின் நடுவில் இருக்கும் ஒரு நிலப்பரப்பை குறிக்கும்" என்று உரைவேந்தர் ஐயா அவர்கள் குறிப்பிட்டார்கள்.
தடவு என்பதற்கு சிலப்பதிகாரம் கீழ்கண்ட சான்றுகளை கொடுத்துள்ளது என்று அருமை நண்பர் திரு. கார்த்திகேயன் அவர்கள் தனது பதிவில் குறிப்பிட்டார்கள். அவருக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள்.
வடதிசை மருங்கின் மறைகாத் தோம்புநர்,
தடவுத்தீ யவியாத் தண்பெரு வாழ்க்கை
காற்றூ தாளரைப் போற்றிக் காமினென - (250 கால்கோள் காதை)
கால மன்றியும் நூலோர் சிறப்பின்
முகில்தோய் மாடத் தகில்தரு விறகின்
மடவரல் மகளிர் தடவுநெருப் பமர்ந்து
நறுஞ்சாந் தகலத்து நம்பியர் தம்மொடு
குறுங்கண் அடைக்குங் கூதிர்க் காலையும் - (100 ஊர்காண் காதை)
"தடவுத்தீ", "தடவுநெருப்" என்று சிலப்பதிகாரம் மிகத் தெளிவாக குறிப்பிடுவதால், "தடவு" என்பது "ஓமகுண்டம்" என்ற பொருளில் வரும். எனவே புறம் பாடலில் வரும் "வடபால் முனிவன் தடவினுள் தோன்றி வேளிர்கள்" என்பதற்கு மிகச் சரியான விளக்கம் என்பது "வடபால் முனிவனது யாககுண்டத்தில் தோன்றிய வேளிர்கள்" என்பதாகும்.
உரைவேந்தர் ஒளவை துரைசாமிப்பிள்ளை ஐயா அவர்கள் எல்லாம் தெரிந்தவர் ஆவார். ஆனால் தெரிந்திருந்தும் அவர் தவறான விளக்கம் கொடுத்துள்ளார் என்பதே வேதனையாகும்.
இதற்கு காரணம் "வன்னியர்கள் மிகவும் ஏழ்மையாக இருக்கிறார்கள்", இவர்களைப் போய் "வேளிர்களின் வம்சாவழி" என்று சொல்வதா ? என்ற எண்ணம் மட்டுமே ஆகும். உண்மையில் சொல்லப்போனால் "கல்வெட்டு சான்றுகளே" எங்களை காப்பாற்றியது. அது எங்களை "சகல புவன சக்கரவர்த்திகள்" என்று சொன்னது. வரலாறு மறந்த சமூகம் எவ்வாறு கீழ்ப்படுத்த படும் என்பதற்கு "வன்னியர்களே" மிகச் சிறந்த உதாரணம் ஆவார்கள்.
புறம் பாடலில் மிகத் தெளிவாக "நானோ அந்தணன்", நீயோ வடபால் முனிவன் தடவினுள் தோன்றிய" என்று வேளிர் குல இருங்கோவேள் என்ற மன்னனைப் பற்றி புலவர் கபிலர் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
வன்னியர்கள் வேளிர்கள் என்பது மிக மிக தெளிவாக குறிப்பிடப்படுவதால், அதுவும் சோழர்கள் காலத்து கல்வெட்டு சான்றுகள் மூலமாக குறிப்பிடப்படுவதால், புறம் பாடலில் வரும் வேளிர் குல இருங்கோவேள் மற்றும் அவனது முன்னோர்கள் எல்லாம் வன்னியர்களே ஆவார்கள் என்பது மிகவும் உறுதியாகும். எங்களது வரலாற்றுப் புகழினைப் பற்றி எங்களுக்கே மிகவும் பிரமிப்பாக இருக்கிறது. எப்படியெல்லாம் எங்களது முன்னோர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதைப் பற்றி நினைக்கும்போது எங்களுக்கு உண்மையிலேயே ஆச்சரியமாக இருக்கிறது.
ஒருகாலத்தில் பெரும் புகழோடு விளங்கிய எங்களது வன்னிய சமூதாயம் சென்ற 18, 19, 20 ஆம் நூற்றாண்டுகளில் மிகவும் கீழ்நிலைக்கு சென்றது என்பது காலத்தின் கோலமாகும்.
----- xx ----- xx ----- xx -----

வன்னிய குல மழவர் பெருமகன் மாவேள் ஓரி

சேர குல மன்னன் "வல்வில் ஓரி" அவர்கள், சங்கத் தமிழ் இலக்கியமான நற்றிணையில் "மழவர் பெருமகன் மாவள் ஓரி" என்று குறிப்பிடப்படுகிறார்கள்.




உண்மையில் நற்றிணையில் இடம்பெற்றிருந்தது என்பது "மழவர் பெருமகன் மாவேள் ஓரி" என்பதே ஆகும். அதாவது "மழவர் குடியின் பெருமகனான மாபெரும் வேளிர் ஓரி" என்பதாகும்.
வேளிர் குல சேரர்கள் தங்களை "யது வம்ச யாதவர்கள்" என்று குறிப்பிடுகிறார்கள். எனவே சேரர்களின் கிளை மரபினர்களான "கொல்லி மழவர் வல்வில் ஓரியும் வேளிர் குடி வழிவந்தவரே ஆவார்கள்". ஆனால் சிலர் "சங்கத் தமிழ் நற்றிணையில் மாறுதல் செய்திருக்கிறார்கள்" என்பது தெரியவருகிறது.
இது உண்மைதான் என்பதனை நமக்கு புறநானூறுப் பாடல் குறிப்பிடுகிறது. புறநானூறு வன்னிய குல சேர மன்னனான அதியமான் நெடுமானஞ்சியை "நெடுவேல் மழவர் பெருமகன்" என்று "வேளிர் குலத்தவனாக" குறிப்பிடுகிறது. இதைப்போலவே "நெடுவேள் ஆவியையும்" வேளிர் குலத்தவன் என்றே அகநானூறுப் பாடலும் குறிப்பிடுகிறது.
எனவே சான்றுகளை அடிப்படையாக கொண்டு "மழவர் பெருமகன் மாவள் ஓரி" என்பதனை "மழவர் பெருமகன் மாவேள் ஓரி" என்றே குறிப்பிடவேண்டும்.
எனவே வன்னியர்களான மழவர்கள் "வேளிர் குலத்தவர்கள்" (அக்னியில் தோன்றிய க்ஷத்ரியர்கள்) ஆவார்கள்.
மழவர் பெருமகன் மாவேள் ஓரி, அசல் அக்மார்க் வன்னிய குல க்ஷத்ரிய மன்னர் ஆவார்கள்.
வல்வில் ஓரி மன்னருக்கும், "வேட்டுவ கவுண்டர் இன மக்களுக்கும்" எந்த ஒரு குல தொடர்பும் இல்லவே இல்லை என்பது மேற்குறிப்பிட்ட சான்றுகளின் மூலம் உண்மையாகிறது.
எங்களது வன்னிய இன மக்கள், எங்கள் குல வேளிர் மன்னன் "வல்வில் ஓரிக்கு" விழா கொண்டாடாமல் விட்டது என்பது காலத்தின் கோலமாகும். இனி வரும் காலங்களில் எங்கள் மன்னருக்கு வெகு விமர்சையாக விழா எடுப்போம்.
வாழ்க எங்கள் வேளிர் குல கோமான் "மழவர் பெருமகன் மாவேள் ஓரியின் புகழ்".
----- xx ----- xx ----- xx -----

கொல்லி மழவர் வல்வில் ஓரியை தவறாக உரிமைகொண்டாடுவோர்

மழவர் பெருமகன் மாவேள் ஓரி, மழவர் குலமான வேளிர் குலத்தினில் பிறந்தவன் என்பதை சங்கத் தமிழ் இலக்கியமான நற்றிணை மிகத் தெளிவாக குறிப்பிடுகிறது. வல்வில் ஓரி சேர மன்னனின் மரபினன் ஆவான்.






இவரைப்போலவே வேளிர் குல அதியமானை "நெடுவேல் மழவர் பெருமகன்" என்று புறநானூறு குறிப்பிடுகிறது. அதியமான் சோழர்கள் காலக் கல்வெட்டில் "கேரள அரசன்" என்றும் "சேர அரசன்" என்றும் குறிப்பிடப்படுகிறான். மேலும் அதியமான்கள் தங்களை "பள்ளிகள்" என்று கல்வெட்டில் குறிப்பிடுகிறார்கள்.
எனவே மழவர்களான "அதியமானும்", "வல்வில் ஓரியும்", வன்னிய குல க்ஷத்ரிய சமூதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பது முற்றிலும் உண்மையாகிறது.
வேளிர் குடியான மழவர் குடியில் இருந்து பிறந்த வல்வில் ஓரி மன்னனை, தங்களது வம்சத்தவர்கள் என்று தவறாக கருதி விழாவும் எடுத்துவருகிறார்கள் சிலர்.
நாம் இப்போது மன்னர் வல்வில் ஓரி அவர்களை "வேளிர் குடியில் தோன்றிய மழவர்" என்று சொல்லும்போது அவர்களுக்கு மிகப்பெரும் அதிர்ச்சி ஏற்படுகிறது. வரலாற்றை சரியாக புரிந்து கொள்ளாமல் இருப்பதால் வரும் தவறுகள் இவை.
உடனே இதிலிருந்து தப்பிப்பதற்காக அவர்கள் "மழவர்" என்பதற்கு "இளமையான வீரர்கள்" என்று பொருள் சொல்கிறார்கள்". அதாவது மழவர்கள் என்றால் ஒரு இனம் (குலம்) கிடையாதாம். அது "இளமையான வீரர்களை மட்டுமே குறிக்க பயன்படுமாம்".
"கொல்லி மழவர்" என்றால் "கொல்லி மலையில் வாழும் மன்னன் பெற்றிருந்த இளம் வீரர்கள் கொண்ட படையாம்.
அதுபோலவே "மழவர் கோன் பெற்ற செம்பியன் மாதேவி" என்றால் "இளம் வீரர்களை பெற்றிருந்த அரசர் பெற்ற செம்பியன் மாதேவியாம்".
அப்படியென்றால் "மழவராயன் கட்டில்", "மழவராயன் அரியணை" என்றால் "இளம் வீரர்கள் படுக்கும் கட்டில், அரியணை" என்று பொருள் வருமா ?
"மழப்பாடி" என்றால் "இளம் வீரர்கள் தங்கும் இடம் என்று பொருள் வருமா " ?
"மழவூர்" என்றால் "இளம் வீரர்கள் வாழும் ஊர் என்று பொருள் வருமா" ?
"மழநாடு" என்றால் "இளம் வீரர்கள் வசிக்கும் ஊர் என்று பொருள் வருமா" ?
"மழவராய கோத்திரம்" என்றால் "இளம் வீரர்களின் கோத்திரம் என்று பொருள் வருமா" ?
"மழவர் குலம்" என்றால் "இளம் வீரர் வீரர்களின் குலம் என்று பொருள் வருமா" ?
"மழவர் பெருமகன் மாவேள் ஓரி", "நெடுவேல் மழவர் பெருமகன் அதியமான்" போன்றவர்கள் "வேளிர்கள்" (வேள்) என்று குறிப்பிடப்படுகிறார்கள்.
புறநானூறு பாடல் 201, "இருங்கோவேள்" என்ற மன்னனை "வேளிர் குல மன்னன்" என்று குறிப்பிடுகிறது.
எனவே "வல்வில் ஓரி" என்ற மன்னன் "வேளிர் குலத்தவன்" ஆவான்.

சோழர்கள் காலத்தில் வீர மல்லர்கள்

மல்லர்" என்ற சொல்லானது "வீரர்களை" குறிக்கும் சொல்லாகும். குறிப்பாக அது "மல்யுத்த வீரர்களை " குறிக்க பயன்பட்டது. சிறந்த மல்யுத்த வீரனான "ராஜ சிம்ம பல்லவன்" பெயரில் அமைந்ததே "மாமல்லபுரமாகும்". நந்தி வர்ம பல்லவன், "காடவ குல நந்திவர்ம பல்லவ மல்லன்" என்று குறிப்பிடப்பட்டான்.
சோழர்கள் காலத்தில் பல கல்வெட்டுகளில் "மல்லர்" என்ற சொல்லானது அக்னி குல க்ஷத்ரியர்களான "வன்னியர்களையும்" மற்றும் "சுருதிமான்களையும்" குறிக்க பயன்பட்டது :-
"இருங்கோளர் பிரிதிவீபதி அமணிமல்லன்"
(கி.பி. 992, ராஜராஜ சோழன், விருத்தாசலம்)
"இருங்கோளக்கோனார் அமணிமல்லன் சுந்தரச்சோழர்"
(கி.பி. 1014, ராஜராஜ சோழன், விருத்தாசலம்)
"பள்ளி அமணிமல்லன் பள்ளிகொண்டனான மறவாட்டுமலை"
(கி.பி. 1050, ராஜாதிராஜ சோழன், விருத்தாசலம்)
"பள்ளி சேந்தன் சுத்தமல்லனான வாணகோவரையன்"
( கி.பி. 1137, விக்கிரம சோழன், அரியலூர்)
இவரது மற்றோரு பெயர் "வாணகோவரையன் சுத்தமல்லன் முடிகொண்டான்" என்பதாகும். இவரது தந்தையின் பெயர் "சுத்தமல்லன் சோழகுல சுந்தரனான கங்கைகொண்டசோழ வாணகோவரையன்" (வாணகோவரையன் சுத்தமல்லன் உத்தம சோழனான இலங்கேஸ்வரன்) என்பதாகும்.
"சுருதிமான் நக்கன் சந்திரனான ராஜமல்ல முத்தரையன்"
(கி.பி. 1015, ராஜேந்திர சோழன், ஊட்டத்தூர்)
"ஊட்டத்தூர் நாடு உடையான் மல்லன் சியனான பிரம்மாதிராய முத்தரையன்"
(கி.பி. 1243, மூன்றாம் ராஜராஜ சோழன், ஊட்டத்தூர்)

வன்னியர்களான பங்களநாட்டு கங்கர்களின் உறவினர்களான பொத்தப்பிச் சோழர்கள்

தமிழகத்தின் இன்றைய "போளூர்", "திருவண்ணாமலை" போன்ற பகுதிகளை பல்லவர்கள், ராஷ்டிரகூடர்களின் காலங்கள் முதல் சோழர்களின் காலங்கள் வரை அரசாட்சி செய்தவர்கள் "பங்கள நாட்டு கங்கரையர்கள்" என்ற அரச மரபினர்கள் ஆவார்கள்.





இவர்கள் திருவண்ணாமலை கோயிலில் உள்ள மூன்றாம் குலோத்துங்கச் சோழனின் கிளிகோபுர கல்வெட்டில் :-
"பங்களனாட்டுக் கூத்தாடுந் தெவன் பிரதிவிகங்கன் வந்னிய மாதெவன் அழகிய சொழநென்" (S.I.I. Vol-VIII, No.137, Line - 2).
கூத்தாடுந் தெவன் பிரதிவிகங்கன் வந்நிய மாதெவன் அழகிய சொழநென்" (S.I.I. Vol-VIII, No.137, Line - 5). என்று குறிப்பிடப்பட்டார்கள்.
பங்களநாட்டு கூத்தாடும் தேவன் பிரித்விகங்கன் வன்னிய மாதேவனின் மற்றொரு பெயர் "சோழேந்திர சிம்ம பிரித்விகங்கன்" என்பதாகும். இவருடைய மகனது பெயர் :-
"சீய கங்கனான சிறைமீட்டப் பெருமாள்"
என்பதாகும். இவர் பெரும் பராக்கிரமசாலியாக இருந்திருப்பர் என்பதை இவரது பெயரான "சிறைமீட்டப் பெருமாள்" என்பதிலிருந்தே தெரியவருகிறது. எதிரிநாட்டு சிறையை தாக்கி உடைத்து, தனது ஆட்களை மீட்க எவ்வளவு துணிவு வேண்டும் என்பதை நினைத்து பாருங்கள். அத்தகைய பெரும் ஆற்றல் மிக்கவராக, வன்னிய குல சிங்கம் "சீய கங்கன் சிறைமீட்டப் பெருமாள்" அவர்கள் இருந்திருக்கிறார்.
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், மேல்பாடி என்ற ஊரில் இருக்கும் மூன்றாம் ராஜ ராஜ சோழனின் கல்வெட்டு ஒன்று (கி.பி. 1223), கீழ் கண்டவாறு குறிப்பிடுகிறது :-
"சிறைமிட்ட பெருமாளான சியகங்கதெவர் மாமன் மதுராந்தகப் பொத்தப்பிச்சொழன் புடொலியரசன் இத் திருமண்டபம் செய்வித்தென் பொத்தப்பிச்சொழன் புடொலிஅரசன் புவிமெ லெத்திசையுஞ் செல்லு எழில் மெற்பாடி மெய்த்தவத்தாற் சொளென்திரசிங்கநாயகற்குத் துகவமணிவாள் எந்து மண்டபம் செய்தான்" (S.I.I Vol-IV, No.317).
மேற்குறிப்பிட்ட கல்வெட்டில் குறிப்பிடும் செய்தி என்னவென்றால் :-
"சிறைமீட்டப் பெருமாளான சீயகங்க தேவர் அவர்களின் மாமன் பொத்தப்பிச் சோழன் புடோலி அரசன் அவர்கள், மேல்பாடி இறைவனின் மெய்தவத்தால் சோழேந்திர சிங்க நாயகருக்கு துகவமணிவாள் ஏந்தும் மண்டபம் செய்வித்தான்" என்பதாகும்.
சிறைமீட்டப் பெருமாளான சீயகங்க தேவர் அவர்களின் தந்தையார் பெயர் தான் "சோழேந்திர சிங்க நாயகர்" என்பதாகும். அதாவது "பங்களநாட்டு கூத்தாடும் தேவன் பிரித்விகங்கன் வன்னிய மாதேவனான சோழேந்திர சிம்ம பிரித்விகங்கன்" என்பதாகும். இவரது பெயரில்தான் பொத்தப்பிச் சோழன் புடோலி அரசன் அவர்கள், "துகவமணிவாள் ஏந்தும் மண்டபம்" செய்வித்தார்கள்.
பொத்தப்பிச் சோழனான புடோலி அரசனின் அக்காளை "பிரித்விகங்கன் வன்னிய மாதேவன்" திருமணம் செய்திருக்கவேண்டும். எனவே தான் பொத்தப்பி சோழன் அவர்கள், சிறைமீட்டப் பெருமாளான சீயகங்க தேவரின் "மாமன்" என்று கல்வெட்டில் குறிப்பிடுகிறார்கள். அதாவது "தாய் மாமன்" என்று குறிப்பிடுகிறார்கள்.
சங்க கால கரிகால் சோழனின் மரபினனான பொத்தப்பிச் சோழன் புடோலி அரசன் அவர்கள், தனது அக்காளின் கணவர் (மாமன்) பிரித்விகங்கன் வன்னிய மாதேவனின் பெயரில் "துகவமணிவாள் ஏந்தும் மண்டபம்" செய்திருக்கிறார்கள்.
"துவக மணி வாள் ஏந்து மண்டபம்" என்பது என்னவென்று தெரியவில்லை. அநேகமாக "வெற்றி வாள் ஏந்தும் மண்டபமாக இருக்கவேண்டும்". பொத்தப்பிச் சோழனின் மாமன் "வன்னிய மாதேவன்" அவர்கள், போரில் பெரும் வெற்றி கொண்டதின் காரணத்தினால் "வெற்றி வாள் ஏந்தும் மண்டபம்" செய்திருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது.
மேற்குறிப்பிட்ட தெளிவான சான்றுகளின் மூலம், சங்க கால கரிகால் சோழனின் வழிவந்தவர்களான பொத்தப்பி சோழர்களும் (தெலுங்கு சோழர்கள்), வேளிர் வழி வந்த பங்களநாட்டு கங்கரையர்களும், "வன்னிய குல க்ஷத்ரிய சமூதாயத்தைச்" சேர்ந்தவர்கள் என்பது தெரியவருகிறது.
எனவே, சங்க கால கரிகால் சோழனின் மரபினர்கள் "வன்னிய குல க்ஷத்ரியர்கள்" என்பது மேற்குறிப்பிட்ட சித்தூர் மேல்பாடி கல்வெட்டின் மூலம் உறுதியாகிறது.
கரிகால் சோழனின் மரபினர்கள் "வன்னிய குல க்ஷத்ரியர்கள்" என்னும் பட்சத்தில், க்ஷத்ரிய சிகாமணி ராஜ ராஜ சோழனின் மரபினர்களும் "வன்னிய குல க்ஷத்ரியர்களே" என்பதும் உண்மையாகும். ஆதலால் தான் "சோழர்களின் குல தெய்வ கோயிலான சிதம்பரம் நடராஜர் கோயிலில்" பிச்சாவரம் சோழ அரசர்களுக்கு திருமுடி சூட்டப்படுகிறது.
----- xx ----- xx ----- xx -----

கங்க மார்த்தாண்டன் கங்க சூளாமணியான அத்திமல்லன் கன்னரதேவ பிருத்வி கங்கரையன்

வன்னியர்களான பங்களநாட்டு கங்கரையர்கள், ராஷ்டிரகூடர்களின் கீழ் குறுநிலமன்னர்களாக இருந்தார்கள்.
பங்களநாட்டு "அத்திமல்லன் கன்னரதேவ பிருத்வி கங்கரையன்" அவர்கள் "கங்க மார்த்தாண்டன்" என்றும் "கங்க சூளாமணி" என்றும் அழைக்கப்பெற்றார்கள்.
கங்க மார்த்தாண்டன், கங்க சூளாமணியான "அத்திமல்லன் கன்னரதேவ பிருத்வி கங்கரையன்" அவர்கள் தக்கோலப் போரில் ராஷ்டிரகூடர்களுடன் இணைந்து முதலாம் பராந்தகச் சோழனின் மகனான இராஜாதித்யனை வெற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
கங்க மார்த்தாண்டன், கங்க சூளாமணியான "அத்திமல்லன் கன்னரதேவ பிருத்வி கங்கரையன்" அவர்களின் சிற்பம், திருவண்ணாமலை மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள அக்னிஸ்வரர் கோயிலில் உள்ளது.
----- xx ----- xx ----- xx -----


இராஷ்டிரகூட மன்னன் கன்னரதேவன் சோழர் மரபில் தோன்றிய மன்னன்

பிற்கால சோழப் பேரரசை தோற்றுவித்த "விஜயாலய சோழனின்" (கி.பி. 848 - 881) மகன் முதலாம் ஆதித்த சோழன் (கி.பி. 871 - 907) ஆவான்.




முதலாம் ஆதித்த சோழனுக்கு பட்டத்தரசிகள் இருவர் இருந்தார்கள். மூத்தவள் "இளங்கோப்பிச்சி" ஆவாள். இந்த அம்மையார், இராஷ்டிரகூட மன்னன் இரண்டாம் கிருஷ்ணனின் மகள் ஆவார்கள்.
பல்லவ அரசி "காடுவெட்டிகள் திரிபுவனமாதேவி வயிரியக்கன்" என்பவள், முதலாம் ஆதித்த சோழனின் மற்றொரு பட்டத்தரசி ஆவார்கள். இந்த அம்மையார் "காடவ கோப்பெருஞ்சிங்கனின் முன்னோர்" ஆவார்கள். எனவே இந்த அம்மையார் "வன்னிய குல க்ஷத்ரிய சமூதாயத்தைச்" சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
முதலாம் ஆதித்த சோழனுக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். மூத்தவன் பெயர் "முதலாம் பராந்தக சோழன்", இளையவன் பெயர் "கன்னர தேவன்". கன்னர தேவன் "இளங்கோப்பிச்சியின்" வயிற்றில் பிறந்த மகன் ஆவான்.
மூத்தவன் என்பதால் "பராந்தக சோழன்", சோழ பேரரசுக்கு பட்டம் ஏற்றான். இவன், "பல்லவ அரசி காடுவெட்டிகள் திரிபுவனமாதேவி வயிரியக்கன்" அவர்களின் மகன் ஆவான் என்று கருதப்படுகிறது.
ஆனால், இராஷ்டிரகூட மரபில் வந்த இளங்கோப்பிச்சி அவர்கள், "பராந்தக சோழன்" அரியணை ஏற்றதை ஏற்கவில்லை போலும். அரசியார் இளங்கோப்பிச்சி அவர்கள், மூத்த பட்டத்தரசி என்பதால், தன்னுடைய மகன் "கன்னரதேவனே" சோழ அரியணைக்கு பட்டம் ஏற்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தார்கள் போலும்.
ஆனால் அது நடக்காமல் போகவே, "யது குல யாதவ மரபில்" வந்த அரசியார் இளங்கோப்பிச்சி அவர்கள், தன்னுடைய தாய்நாடான கர்நாடக மாநிலம் சென்று, தனது மகன் கன்னரதேவனை "இராஷ்டிரகூட பேரரசுக்கு அரசன் ஆக்கினாள்".
எனவே கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் முதலாம் ஆதித்த சோழனின் மகன் கன்னர தேவனே "இராஷ்டிரகூட பேரரசின் மன்னனாக" இருந்தான்.